May 25, 2008

செயல் விளைவு தத்துவம் cause and effect வேதாத்திரி மகரிஷி

செயல் விளைவு தத்துவத்தை இறை நீதி என்று கருத்தில் கொள்ள வேண்டும். எங்கும் எல்லா பொருட்களாகவும், பொருட்களோடும் நிறைந்தியங்கும் எல்லா வகையான ஆற்றல்களாகவும் இயங்கிக் கொண்டிருப்பது அழுத்தம் எனும் எல்லையற்ற இறையாற்றலேதான். இறைவெளியாக் இருந்து கொண்டு தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலாக விளங்குவது தான் ஆதிசக்தியெனும் இறையாற்றலாகும்.

இவ்வாற்றல்தான் எந்த இடத்திலும் எந்த உருவத்திலும் அததற்கேற்ற இயக்கச் சீர்மையோடு செயலாற்றி வருகிறது. தோற்றப் பொருட்களில் இவ்வாற்றல் வடிவம், துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற மூன்றிணைப்புச் சீர்மையாக இயங்குகின்றது. கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐந்து புலன்களும் கை, கால், வாய், குதம், பால் குறி என்ற ஐந்து தொழில் கருவிகளும் அமைந்துள்ள மனிதனிடத்தில் இறைநிலை முதலாக மனித மனம் வரையில் நடைபெற்ற பரிணாம சீர்மையை உணர்ந்துகொள்ளும் மனமாக இறையாற்றல் முழுமை பெற்றுள் இயங்குகிறது.

ஆராய்ந்து தெளியுமிடத்து எல்லையற்ற அருட்பேராற்றலான இறையாற்றலேதான், தனது பரிணாமச்சிறப்பில் மன ஆற்றலாகவும் செயல்புரிகின்றது. ஆயினும் இறையாற்றலோ எல்லையற்ற இறைவெளியாக இருந்துகொண்டே அதனுள் அடங்கியுள்ள ஒவ்வொரு பொருளிலும் அதனதன் தன்மைக்கேற்பவும். அளவுக்கேற்பவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மன ஆற்றலோ சீவ இன உடலில் மையம் வைத்துக்கொண்டு எந்தப் பொருளோடு தொடர்பு கொள்கிறதோ அந்ததந்த அளவில் விரிந்தும், சுருங்கியும் எல்லை கட்டிக் கொண்டும் இயங்குறது. இறையாற்றல் பருமன், விரைவு, காலம், தொலைவு என்ற நான்கு கணக்குகளுக்கு உட்படாதது.

மன ஆற்றலோ எப்போதும் இறைநிலையை உணர்ந்து அதனோடு இணைந்திருக்கும் காலம் தவிர

  • பருமன்,
  • விரைவு,
  • காலம்,
  • தொலைவு

என்ற கணக்கில் தான் இயங்கி கொண்டிருக்கும். இதோடு மனதுக்கு ஒரு வியத்தகு இயல்பும் உண்டு. எப்பொருளை நினைத்தாலும், அதைப்போலவே வடிவத்தாலும், குணத்தாலும் தன் மாற்றம் பெறவல்லது அது.


கவி

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை

எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்

அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்

அறிவினிலும் உடலினிலும் மாற்றங்கானும்;

இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்

எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்

தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்.

பேரியக்க மண்டலம் முழுவதும் இறையாற்றலின் பரிணாம வடிவங்களும், இயக்கச் சிறப்புகளுமேயாகும். மன ஆற்றலோ இறையாற்றலின் விளைவுகளில் ஒரு சிறு பகுதியேதான். ஆயினும், மன ஆற்றலுக்கு ஒரு தனி மதிப்பும், சிறப்பும் உண்டு. இறையாற்றலின் பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் எனும் மூன்று சிறப்புகளையும், இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் நான்கு நிலைகளால் உணர்ந்து இரசிக்கவல்லது மனம். மேலும் இறையாற்றலின் சிறப்புகளை, விளைவுகளைத் தனது விருப்பத்திற்கேற்ப தனது உடற்கருவிகளின் ஆற்றலுக்குகுட்பட்டு இயக்க மாறறம் செய்து துய்க்கும் வல்லமையும் உண்டு.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மனம், இறையாற்றலின் இயக்கச் சீர்மையினை உணர்ந்து, அதற்கு முரண்படாத முறையிலே, தனது விளைவுகளைத் துய்க்கும் போது, மனம் ம்ற்றும் உடல் என்ற இரண்டுக்குமே பொருத்தமாய் அமையும் உண்ர்வுகள் உண்டாகும்.

மேலும்.

இறையாற்றலின் தன்மைகளையும், சிறப்புகளையும் அறியாமலோ, அலட்சியம் செய்தோ, உணர்ச்சி வயத்தால் தன் முனைப்பு கொண்டோ அளவு மீறியும், முறை மாறியும் மன ஆற்றல் செயல் புரியும் போது, அச்செயலுக்கேற்ப ஏற்படும் துல்லியமான விளைவுகள்தாம் செயல் விளைவு நீதி என்று வழங்கப்படுகிறது. சிறிதளவும் தவறாமலும் பிழையில்லாமலும், அன்பும் கருணையுமே இயல்பாக அமைந்துள்ள இறைநிலையானது சீவன்களிலிருந்து எழும் செயல்களுக்குத் தக்கபடி அளிக்கின்ற இவ்விளைவுதான் கூர்தலறம் என்று மொழி வழியே தமிழில் கூறப்படுகின்றது. இதுவேதான் இறைநீதியாகும்
கவி
தப்புக் கணக்கிட்டுத் தானொன்றை எதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கை விதி? ஒழுங்கமைப்பிற்கேற்றபடி
அப்போதைக்கப்போதே அளிக்கும் சரிவிளைவு
எப்போதும் கவலையுற்று இடர்படுவார் இதையுணரார்.

வேதாத்திரி மகரிஷியின் செயல் விளைவு தத்துவம் என்ற நூலிலிருந்து ……

மகரிஷியின் செயல் விளைவு தத்துவம் என்ற நூலிலிருந்து ……

May 21, 2008

காயகற்பப் பயிற்சி – சித்தர்கள் Kayakapa payirchi - siddharkal வேதாத்திரி மகரிஷி.

பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.

வித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும். இரண்டாவதாக இரசவாதம் மூலமாக முப்பு என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் முப்பு என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடம் 500 வருடம் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.

உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும். லம்பிகா யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.

மனிதர்களில் சிலர் லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள். அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் லம்பிகா யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடியதே
காயகற்பக் கலையாகும்.

இச்சை -- ஞானமும் வாழ்வும் -- அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


இச்சையின்றியே நாம் உடலாய் வந்தோம்
இச்சைக்கடங்காமலே உடல் மாய்ந்திடும்
இச்சையுள்ளவரையே நம் வாழ்வாகும்
இச்சை ஒழித்திட ஏன் முயலுகின்றீர்கள்.

இச்சை என்பது தேவையுணர்வாகும்
இச்சை மீறச் செயல் வேகமாகிவிடும்
இச்சைச் செயலில் இணைந்திடும் மீறிடும்
இச்சைப் பழக்கத்தால் எண்ணங்களாகிவிடும்.

இச்சையில் கற்பனை எழுவதை ஆய்ந்தறி
இச்சித்தனுபவித்திச்சை இயல்பைப் பார்
இச்சையின் சக்தியை இச்சையில் சேமிக்க
இச்சை உயர்ந்திடும் இன்பம் பெருகிடும்

இச்சை தொடர்புறும் இடமொக்க இயங்டும்
இச்சையின் பலனாகும் இன்பமும் துன்பமும்
இச்சையின் முடிவில் இதே சிவம்
இச்சைத் தத்துவம் இயற்கையின் உச்சமாம்

இச்சித்த பயனாக இதுவரை கண்டதென்ன?
இச்சை சுகதுக்கத்தபாலும் உள்ளதோ?
இச்சையின் காரணம் என்ன? வினவிக்கொள்
இச்சை இருப்பு இயல்பியக்கம் தோன்றும்

இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்
இச்சைக்குள்தானே இயங்குகிறது
இச்சை விரிந்திட ஐம்புலனே வழி
இச்சை அறிவென்ற பெயர் பெற்றதினாலே

இச்சை ஒலி, ஒளி போல் எழும் மாறிடும்
இச்சை வெளியோடு இணைந்து ஒன்றாகிவிடும்
இச்சை இயங்காத இடமதே சூனியம்
இச்சையும் அதுவாகி இரண்டற்றுப் போமங்கே

இச்சையே ஒரு நாடக மன்றம் போல்
இச்சையே அதில் எண்ணற்ற நடிகரும்
இச்சையே அதைப் பார்ப்போர் ரசிப்போராம்
இச்சையே அதன் நிர்வாகி உடையவன்

இச்சை தோன்றும் சுயமாகவும் பிறர்
இச்சையும் உன்னுள் பிரதி பலித்திடும்
இச்சை எழும் போதே ஆய்வோர் அறிவார்கள்
இச்சை இச்சையாலும் திறன் காண்பார்

இச்சை வேகமே மீறிட மீறிட
இச்சிக்கும் வேகமாய் இயங்கும் நிலையைப்பார்
இச்சை வேகமும் இயங்கும் வேகமும்
இச்சித்தறிந்திட இரண்டும் நீ அவ்விடம்

இச்சை இயங்கும் நிலைக்கேற்ப பெயர் பெறும்
இச்சையே காம முதலான அருகுணம்
இச்சையின்றேன் உயர் ஞான்ந்தான் ஏது?
இச்சையே நி நான் இவர் அவர் என்பதும்

இச்சையின் மூலமும் முடிவும் ஒரே நிலை
இச்சை ரசிப்பது எண்ணுதல் அறிவாகும்
இச்சை பொருள் வரை இயங்க ஐயுணர்வாகும்
இச்சை உயர்ந்து தன்னிலை கண்டால் ஞானமாம்

இச்சையை புள்ளியாய் நிறுத்தப் பழகிடு
இச்சை விரிந்தால் ஆராய்ச்சியாக்கிடு
இச்சை விரிந்து பேராதார நிலையெய்த
இச்சைப் புலன்களை வென்று நிலை பெறும்

இச்சை முதல் படி * காமதேனு வென்பார்
இச்சை ஒழுங்குற்றால் கற்பகம் என்பார்கள்
இச்சை உயர்நிலை சிந்தாமணி யாகும்
இச்சை நிலைக்கேற்ப இம்மூன்று பேர் பெறும்

இச்சை வேகம் தடைப்படும் காலத்தில்
இச்சைச் சினமாக கவலையாய் நிலைமாறும்
இச்சையின் தோற்றமும் கவலையாய் நிலைமாறும்
இச்சை தோற்றமும் முடிவுமறிந்திடில்
இச்சையே எல்லை யற்ற பராபரம்.

*

  • காம + தேனு = ஆசைப் பசு
  • கற்பு + அகம் = கற்பகம்
  • சிந்தா + மணி = சிந்தை உறுதி

--அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி --

www.vethathiri.org

Apr 6, 2008

Value of KAYAKALPA yoga


Vethathiri Mahrishi explains Kayakalpa

By sublimating and recycling
the sexual vital fluid,
KayaKalpa frees you from
a variety of earth-bound ills.
Your mind develops strength
and Contentment comes to stay;
Charity, Compassion,
and Chastity - consciousness,
Patience, Forgiveness,
and Acuity of intellect -
All these become part
of your nature and being.
Your thought gets oriented
to the Absolute direct
and fear of death withers
in the effulgence of Wisdom.

- Yogiraj Vethathiri Maharishi -

Apr 3, 2008

Three Bodies - VETHATHIRI MAHARISHI


Young Vethathiri Maharishi

Vethathiri Maharishi explains 3 bodies and Genetic center of the human.

Physical Body

Human life is a combination of the Physical, Astral and Causal Bodies. Of these, the physical body alone is perceptible to our senses. The astral body is formed by the association of the infinitesimal energy particles, and is known as the life-force. The third one is the causal (magnetic) body.

The human being is regarded as the ultimate stage in the evolution of living beings on the earth. The structure of the “Physical Body” is built with such a precision and appropriate limbs and senses. The human mind is provided with the sixth sense, which is able to realise all kinds of subjective phenomena (i.e. noumena) that are not possible to be understood by any of the five senses. The omniscient consciousness of Nature is to be adored for evolving such a wonderful bio-magnetic organism, to fulfil the greatness of the universe and all its wonders.

Astral Body

The outer layer of man is the physical body. The inner layer is the “Astral Body”, which is the aggregate of the life force particles that penetratively circulate throughout the physical structure. This life force particle in the living being is nothing but the infinitesimal energy particle (Vethon), the primary manifestation in the universal evolution from the Gravity. In the universe, the “Vethon” is the first principle among the “Pancha Boothas”. The same is also known as “Akash” in Eastern philosophy, being the infinitesimal unit of all masses in the universe. If we take the physical body as the first and the peripheral layer of the human being, the second and inner layer is the astral body.

Causal Body

The third layer of man is the “Causal Body”. This is the aggregate total of the bio-magnetism existing and functioning in the physical body. The infinitesimal particles that constitute the astral body have been explained above. The aggregate total of the Yogons emanated by the life force particles coalesces with the surrounding eternal space (Gravity) and evolves as the invisible power, bio-magnetism. By the same process the magnetism evolving at all places in the universe is the supreme power, universal magnetism.

Extension of sensing faculty from the bio-magnetism is the starting point of the living being. The bio-magnetism in the physical body is circulating at its own speed. As a general law of nature, anything that circulates or spins forms its own intensified centre. Under this principle the bio-magnetism also gets intensified and forms its own intensified centre. This centre automatically forms at the centre of the physical body and this is what we call the “Genetic Centre”. Here, the genes with their chromosomes accommodate the intensity of bio-magnetism, sexual vital fluid, and the heavier life force particles. This is a divine magnetic domain of compressed characteristics of the three layers of man (Physical body, Astral body, and Causal body). This is the concept of called genetic centre and the same in a spiritual context is called “Soul”. Just as the consciousness and force cannot be separated from the Gravity, we cannot separate the genetic center and the soul. Such a great, imperceptible diving principle is the soul.